• Fri. Mar 29th, 2024

ஓ.பன்னீர்செல்வம் புலியாக மாற வேண்டும்.. அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் பேட்டி

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் புலியாக மாற வேண்டும். சசிகலா ,டிடிவி தினகரன் அதிமுகவில் இணைய வேண்டும். பெரியகுளத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் பேட்டி.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை துரோகி என்று சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி தான் உண்மையான துரோகி. எம்ஜிஆர் கண்ட ஒற்றுமையான அதிமுக பிளவு பட்டதால் தேர்தலில் தோல்வியை சந்தித்தது. எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் கூறி வருகிறார். ஆனால் அதிமுக ஒன்றிணைவதற்கு எடப்பாடி பழனிசாமி தான் முட்டுக்கட்டையாக செயல்பட்டு வருகிறார். எப்படியும் கட்சியை தன் வசப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்.

ஓ. பன்னீர்செல்வத்தை பசுந்தோல் போர்த்திய புலி என்று ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். ஓ பன்னீர்செல்வம் பசு தான். அவரை புலியாக மாறி இப்படி பேசுபவர்களை அடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.தேனி மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவில் தினகரனையும் சசிகலாவையும் இணைக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் தற்போது வரை உறுதியாக உள்ளோம். சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இணைய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.இவ்வாறு அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையது கான் பெரியகுளத்தில் உள்ள ஓ பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *