• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கேண்டீனில் நோ அசைவம் : உச்சநீதிமன்றம் அதிரடி

Byவிஷா

Oct 4, 2024

நவராத்திரி தொடங்கியதை முன்னிட்டு, உச்சநீதிமன்ற கேண்டீனில் கறி சாப்பாடு கிடையாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற கேண்டீனில் இறைச்சி உணவுகள் மற்றும் வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு நீதிமன்ற வளாகத்தில் உள்ள சில வழக்கறிஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவின் பின்னணியில் மத சார்ந்த செல்வாக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், வழக்கறிஞர்கள் சிலர் உணவு விருப்பங்களில் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளை விதிப்பது முறையல்ல என்ற கருத்துகளை முன்வைத்து, நீதிமன்ற நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த முடிவினால், அனைவருக்கும் சமமாக உணவு கிடைப்பதற்கு தடையாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். சிலர், உணவுத் தடை போன்ற நடவடிக்கைகள் பலவீனமான முன்னுதாரணங்களை உருவாக்கும் என்றும் இத்தகைய முடிவுகள் பொதுவாழ்வில் குழப்பங்களை உருவாக்கும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற நடவடிக்கைகள் வழக்கமாக விரதம் கடைப்பிடிக்கும் வழக்கறிஞர்கள் வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துக் கொள்வதற்கு வழிவகுக்கும். ஆனால், இவ்வாறு உச்ச நீதிமன்றம் மதத்துடன் தொடர்புடைய முடிவுகளை ஏற்கிறதா என்ற விவாதம் தற்போது பெரிதாகியுள்ளது.