டிஜிட்டல் கரன்சிகள் அறிமுகப்படுத்தபடுவதால் இனி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறையும் என ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது.
டிஜிட்டல் கரன்சிக்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி .சமீபத்தில் பிட்காயின் மாதிரியான டிஜிட்டல் கரன்சிகளை தடை செய்த மத்திய அரசு ,ரிசர்வ் வங்கி சார்பில் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி விரைவில் இ.ரூபாய் எனப்படும் இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. இவை பயன்பாட்டுக்கு வந்தால் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறையும் என தெரிகிறது.