UPI பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற தகவலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்
GPAY,PAYTM,PHONEPE போன்ற தளங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.”டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மக்களுக்கு இலவசமாக கிடைத்தால்தான் இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கமுடியும் .அதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பதற்கு இது சரியான தருணமல்ல” என குறிப்பிட்டுள்ளார்.கட்டணம் இப்போது இல்லை …ஆனால் இருக்கு…?