இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோமநாத் நியமனம். அடுத்த 3 ஆண்டுகளுக்கு சோமநாத் பதவி வகிப்பார் என மத்திய அரசு அறிவிப்பு!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சிவனின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து புதிய தலைவருக்கான ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில் சோமநாத் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் அடுத்த 3 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த சோமநாத் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.