கடந்த இரண்டு வருடங்களாக உலகையே அச்சுறுத்தி பல லட்சம் உயிர்களை காவு வாங்கிய ஆட்கொல்லி அரசன் கொரோனாவின் கோரத்தாண்டவம் முடிவடையாத நிலையில், தற்போது மூன்றாவது அலை வேகம் அடுத்து இந்தியா முழுவதும் முழுவீச்சில் பரவி வருகிறது.
இதனை தடுத்து நிறுத்த இந்திய அரசும் அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது. உலகமே வியக்கும் வண்ணம் பலகோடி தடுப்பூசிகளை இரண்டு முறை கோடிக்கணக்கானோர் போட்டு உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளனர். அப்படி இருந்தும் கொரோனாவின் கோரத்தாண்டவம் குறைந்தபாடில்லை.
தற்போது மூன்றாவது அறை வீசிக் கொண்டிருக்கிறது .தமிழக அரசு அதனை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை சார்பாக மாவட்டம் தோறும் மாவட்ட நிர்வாகங்கள் துணை கொண்டு ,பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. இதனால் 90 சதவிகிதம் கொரோனாவின் அச்சுறுத்தல் கட்டப்பட்டிருந்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இன்மையால் அதனுடைய வேகம் வீரியம் அடைந்து வருகிறது என்றே சொல்லலாம்.தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும், நோயும் என்பதுபோல் தனக்கு வரவில்லையே என்று ஒவ்வொரு மக்களும் அசால்டாக உள்ளனர்.
தயார் நிலையில் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என்று எத்தனையோ இடங்களை மருத்துவத்திற்காக அரசு தயார் படுத்தி வைத்திருக்கிறது. இவையெல்லாம் எந்த ஒரு உயிரும் இப்பூவுலகை விட்டு சென்ற விடக்கூடாதே என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான். இதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டியது மக்களின் கடமை .அரசு அறிவுறுத்தியுள்ளதுபோல் முக கவசம் அணிவது, கிருமி நாசினி தெளித்து, பொது இடங்களில் சமூக விலகலை கடைபிடிப்பது .தியேட்டர் ,கோயில் வாகனங்கள் ,பேருந்துகளில் அளவாக பயணிப்பது ,உள்ளிட்ட நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்மை உயிர் இழப்புக்கு காரணமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே வரும் காலங்களில் நமக்கும் நம் சந்ததியினருக்கும் நல்ல ஒரு சமுதாயத்தை விட்டு செல்ல வேண்டும் என்றால் , அனைவரும் அரசு அறிவுறுத்தியுள்ளபடி விழிப்புணர்வு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வி. முரளிதரன் இரவு பகல் பாராமல் அதிகாலை 5 மணி முதல் இரவு தூங்குவதற்கு முன்பு வரைகூட குரானாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் நேரடியாகச் சென்று முக கவசங்களை வழங்கியும், அவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். மேலும் காவலர்கள், மருத்துவ அலுவலர்கள் வருவாய் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களையும் இந்த விழிப்புணர்வு பணிகளை முழுவீச்சில் ஈடுபட அறிவுறுத்தி இருக்கிறார்.
அதன் அடிப்படையில் நேற்று ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் டிஎஸ்பி தங்க கிருஷ்ணன் ,கையில் முகக் கவசங்கள் வைத்துக் கொண்டு நேரடியாக பொதுமக்களை சந்தித்து சமூக விலகலை கடைபிடிக்க சொல்லியும், முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முககவசங்களை வழங்கி ,விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதை பார்ப்போர் நெஞ்சில் ஒரு விதமான பாசத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை போல் அனைத்து இடங்களிலும் செயல்பட்டால் ,சென்டிமென்டிற்கு கட்டுப்படும் தமிழர்கள் ,தொடர்ந்து தானாகவே முகக் கவசங்கள் அணிவது சமூக விலககளை கடைபிடிப்பது, கிருமி நாசினிகளை பயன்படுத்துவதை செய்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு -20பேர் கைதுதிருமங்கலத்தில் டெல்லி பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டசம்யுக்த கிசான் போர்ச்சா […]
- கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்- ஆளுனர் ஆர்.என். ரவி பேச்சுஇளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் […]
- விபத்துக்கு பிறகு கோரமண்டல் விரைவு ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டதுஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் இரண்டு நாட்களுக்கு பிறகு […]
- உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மதுரை- கப்பலூர் சுங்கச்சாவடியில் மரக்கன்றுகள் அளித்து விழிப்புணர்வுஉலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பள்ளி சிறுவர் , சிறுமிகளுக்கு விழிப்புணர்வு […]
- ஒடிசாவில் மீண்டும் ரயில் தடம் புரண்டது விபத்துநாட்டையே உலுக்கிய ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒடிசாவில் இன்று சரக்கு […]
- பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில் கோடை வெப்பம் காரணமாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் […]
- ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டதுகடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிசிகொம்பன் யானை தற்போது பிடிபட்டுள்ளது.கேரள […]
- இன்று நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று […]
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் […]
- மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்த 2018மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த ஏழு ஆண்டுகளாக மோகன்லால் […]
- பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது -இன்று உலக சுற்றுச்சூழல் நாள்பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு […]
- விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர், திடீர் இடமாற்றம்…..விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 […]
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]