சிந்தனைத் துளிகள்
• நீங்கள் ஒன்றை ஆழமாக உணர்ந்து, உணர்ந்ததை அழகாக வெளியிடவும் செய்கிறீர்கள் என்றால், ஒரு நல்ல கலைஞராகிவிட்டீர்கள் என்று கூறலாம்.
• மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும்.
• வாழ்க்கையில் ஒரு துன்பத்தை விட்டு வேறொரு துன்பத்தை அடையும்போது ஏற்படும் மாறுதல் ஒருவகை இன்பத்தை உண்டாக்குகிறது.
• உலகத்துக்கே பொதுவான பெரிய குறைகள் இரண்டு உள்ளன. ஒன்று மூடநம்பிக்கை, மற்றொன்று ஆடம்பரம்.
• விலங்குகளிடம் உரிமையோடு வாழ்வதைவிட மக்களன்பு உடையவர்களிடம் அடிமையாக வாழ்வதே போதும்.