பொதுஇடத்தில் மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு தான் என அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தானில் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது ” அசோக் கெலாட் ஒரு பணிவான மனிதர், எளிமையான மனிதர் என்ற பிம்பம் ராஜஸ்தானில் இருப்பது மோடிக்கு நன்றாக தெரியும் எனவே என்னைவிட பணிவானவன் என்பதை காட்டுவதற்காகவே இப்படி செய்துள்ளார். இப்படி நடிப்பதற்கு பதில் நாட்டு மக்களுக்கு அன்பு, மற்றும் சகோதரத்திற்கான செய்தியை வழங்கலாம் என கூறியுள்ளார்.