• Fri. Apr 26th, 2024

அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார்- அமைச்சர் செந்தில் பாலாஜி

ByA.Tamilselvan

Jun 1, 2022

பாஜக தலைவர் அண்ணாமலைக்குபொய் சொல்வதற்காகவே பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துகிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு.
கோவை நவ இந்தியா பகுதியில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது…
கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 400 இடங்களில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் சென்று ஓராண்டு சாதனையை துண்டு பிரசுரமாக கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்து சட்டப்பேரவைத் தொகுதியிலும் திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் பாலங்கள் விரைவில் திறக்கப்படும். குடிநீர் தேவைகளை பொருத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் கிடைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் பேருந்துகளை ஒழுங்குபடுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி சரி செய்யப்படும். தனியார் பேருந்துகளில் அதிவேகத்தை குறைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். மருதமலையில் சிறுத்தை நடமாட்டத்தை பிடிக்க பணிகள் விரைவுபடுத்தபட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தகேள்விக்கு..
பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசினார். அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார். அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது ,புரிந்துகொள்ளும் பக்குவமும் கிடையாது. பத்திரிக்கையாளர்கள் பக்கத்தையும் தொலைக்காட்சி நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்.
முதல்வர் மின்சார உற்பத்தி குறித்தும் ஒதுக்கீடு குறித்தும் பேசியுள்ளார். தமிழக வரிகள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது. எங்கள் மீது தவறுகள் இருந்து சுட்டிக்காட்டினால் சரி செய்ய தயாராக உள்ளோம்” இவ்வாறு அவர் பேட்டியின் போதுகூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *