கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வசிக்கும் பெண்மணி ரூத் ஹாமில்டன். அக்டோபர் 4 இரவு திடீரென பயங்கர சத்தம் மற்றும் புகை வாசனை காரணமாக விழித்துக் கொண்டார், அதை ஆராய்ந்ததில் இது விண்கல் என தெரியவந்தது.
ஹாமில்டன் விக்டோரியா இது குறித்து கூறுகையில், ‘நான் திடீரென்று பெரிய சத்தம் கேட்டு எழுந்து லைட்டை ஆன் செய்தேன். என்ன நடந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த சத்தத்தை கேட்டு யாரோ கூரையை உடைக்கிறார்கள் அல்லது துப்பாக்கியினால் சுடுகிறார்கள் என நினைத்து பயந்தேன். தலையணையில் ஒரு கல் விழுந்திருப்பதைக் கண்டேன். உதவி எண்ணான 911 க்கு போன் செய்து அருகில் உள்ள கட்டுமான தளத்திலிருந்து வந்ததா என்று கண்டுபிடிக்க முயன்றார். ஆனால், விசாரணையில், விண்வெளியில் இருந்து ஒரு பிரகாசமான வெளிச்சம் வந்ததாகக் அங்கிருந்த மக்கள் கூறினர்.
இதன் பிறகு ஹாமில்டனின் வீட்டில் ஒரு விண்கல் விழுந்தது தெளிவாகியது. விண்கல் விண்வெளியில் இருந்து விழுந்தது என்பதை உணர்ந்தபோது, மயிரிழையில் உயிர் தப்பித்ததை நினைத்து நிமத்தி பெருமூச்சு விட்டேன் என்றார்.