• Fri. Mar 29th, 2024

5 கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்..!

ByA.Tamilselvan

Dec 2, 2022

தமிழகத்தில், பக்தர்கள் அதிகம் வருகை தரும் 5 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
2022 – 2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், ‘பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் 10 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு மேலும் 5 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் புதிதாக அமைக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மதுரை – அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், இருக்கன்குடி – அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி – அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை – அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், சங்கரன்கோவில் – அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் புதிதாக மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ள. இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ மையங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *