விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகாவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நீரோட்டங்களையும் குளங்களையும் மற்றும் குட்டைகளையும் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் நீர் நிலை புறம்போக்கு மற்றும் நீர்வழி புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சண்யம் பாராமல் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் ஆலோசனையின்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதற்காக வருவாய்துறையில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளன. சிவகாசி தாலுகாவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது. ஆனையூர் ஊராட்சியில் சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப் பின்புறம் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் 222 மீட்டர் நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டன. தாசில்தார் லோகநாதன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் சர்வேயர் பிரிவு, போலீசார் உதவியுடன் எல்லை கற்கள் நடப்பட்டன. அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் எல்லை கற்கள் நடும் பகுதியில் தங்களது நிலம் இருப்பதாகவும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறி எல்லை கற்கள் நடுவதிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உரிய ஆவணங்கள் கொடுக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]
- இன்று செவ்வாய் கிரகத்தை முதன் முதலாக சுற்றி வந்த மாரினர்-9 விண்ணில் ஏவப்பட்ட தினம்பூமியை தவிர மற்றொரு கோளைச் சுற்றி வந்த செவ்வாயின் முதலாவது முதல் விண்கலம் மாரினர்-9 விண்ணில் […]
- இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -தமிழ் மகன் உசேன் பேச்சுதமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதிமுக […]
- லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்..,மின்சார வாரியம் எச்சரிக்கை..!மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும் என […]
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]