• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கடல் கண்ணாடிப்பாலத்தை பார்வையிட்ட மேயர் மகேஷ்

கன்னியாகுமரியின் புதிய அடையாளமாக, கடந்த டிசம்பர் 31_ம் நாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த. ஐயன் திருவள்ளுவர் சிலை_ சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே ஆன கடல் பரப்பில் கட்டப்பட்ட கண்ணாடிப் பாலத்தை திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி என்பதால்,உலகப்பந்தில் உள்ள அனைத்து நாட்டு சுற்றுலா பயணிகளுடன்,இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த பன்மொழி மக்களும் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் ஒருங்கே ஈர்த்துள்ள. கடலில் கட்டப்பட்டுள்ள கண்ணாடிப் பாலம்.

நாகர்கோவிலில் மாநகராட்சியின் முதல் மேயர் மகேஷ் குடும்ப உறுப்பினர்கள் உடன்.நாகர்கோவில் மாநகராட்சியின் 52_வார்ட் உறுப்பினர்கள், அவரவர் குடும்ப உறுப்பினர்கள் உடன். ஐய்யன் திருவள்ளுவர் சிலை பாறை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடல் பரப்பில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை பன் மொழி சுற்றுலா பயணிகளுடன் பார்வையிட்டதுடன். செல்ஃபி,நிழல் படங்களை மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டார்கள்.