சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச கூடிய ஒரு அதிமுகவை பார்க்க முடியவில்லை என்றும் மக்கள் பிரச்சனைகளை பாஜக தான் தைரியமாக பேசி வருவதாக பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் லாவண்யா மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் திமுக ஆட்சி காலம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது, ஆனால் இந்த 4 ஆண்டு காலம் அவர்கள் ஆட்சி நீடிக்குமா என்று உறுதியாக கூற முடியாது, இந்த ஆட்சிக்கு பின்னர் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் நேரத்தில் எப்படி ஒரு எழுச்சி இருந்ததோ அதே எழுச்சி தற்போது அண்ணாமலையை தலைவராக உள்ள இந்த நேரத்தில் எழுந்துள்ளது. தமிழகத்தின் எதிர்கட்சி போல மக்கள் பிரச்சனைகளை பாஜக தான் பேசி வருகிறது.
சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக ஆண்மையோடு பேச கூடிய ஒரு அதிமுகவை பார்க்க முடியவில்லை, எதிர்கட்சியாக இல்லாமல் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே. மேலும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரண்டு தவறுகளை இழைத்த காரணத்தால் ஆட்சி அமைக்க முடியாமல் சென்றது. பாஜக தயவோடு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். இந்த தோல்வியும் நல்லதுதான், வரும் காலங்களில் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்.
இது போன்று அதிமுக அசிங்கபடுவது ஒன்றும் புதிதல்ல. ஓ.பன்னீர் செல்வத்தை பார்த்து ஆடிட்டர் குருமூர்த்தி ஆண்மை இருக்கிறதா என்று ஊடகங்களின் மத்தியில் பேசியது அன்று சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அன்று அதிமுகவும் வாய் திறக்கவில்லை. இப்போது இந்த அளவுக்கு அதிமுக பாஜகவிற்கு இடம் அளித்துள்ளது. அனைத்து தரப்பிலும் பாஜக நெருக்கடி கொடுத்த போது ஓபிஎஸ் எடப்பாடியை பேசி சமரசம் செய்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலின் போது கூட எம்.ஜி.ஆரை பாஜக முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்தனர். இப்படி 5 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற அதிமுகவினர் உழைத்துவிட்டு, வெற்றியை பாஜக அறுவடை செய்துவிட்டனர். சட்டமன்றத்தில் கால் ஊன்ற அதிமுகவை பயன்படுத்தி கொண்டு இன்று ஆண்மை இருக்கிறதா ? இல்லையா என்று பெண்ணை கட்டி கொடுத்த மாமியார் போல பாஜக கேட்டுக்கொண்டிருக்க அதிமுக அனைத்து பலவீனத்தையும் இழந்துவிட்டது.
இப்போது அதிமுக சுதாரிக்கும் என்று எதிர்பார்க்காமல் இது அவர்களின் சொந்த கருத்து இதற்கு எல்லாம் கட்சி பொறுப்பேற்க்காது என்று ஜெயக்குமாரை விட்டு எடப்பாடி பேச விடுவார்.
இன்னும் அதிமுக என்ன என்ன சங்கடத்தை சந்திக்க போகிறதோ என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]
- பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணிசென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி […]
- குரங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்…லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 […]
- வெளியானது நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத் தேதி…நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் […]
- அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம்சிறுபான்மை மக்கள் நல கட்சி அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
- ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுதலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளுக்கு தொப்பி, கூல்டிரிங்க்ஸ் வழங்கிய […]
- புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள்மதுரை புது மண்டபத்தில் உள்ள கடைகளில் பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உலகப் […]
- மதுரை – தேனி விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு- கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கைமதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் […]
- காட்டுயானை தாக்கி டீக்கடைக்காரர் பலி!கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மகன் ஆனந்தகுமார்(வயது […]
- இன்று கருணாநிதி சிலையை-வெங்கையாநாயுடு திறந்து வைக்கிறார்சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்புசென்னை ஓமந்தூரார் அரசினர் […]