மதுரை பழக்கடை ஜெயவீரன் இல்ல திருமண விழா திருமங்கலம் சோழவந்தான் ரோட்டில் உள்ள சுவைதிலகர் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தனது துணைவியார் காந்தி அழகிரி மகன் துரை தயாநிதி ஆகியோருடன் நேரில் வந்து திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மணமக்களை ஆசீர்வதித்து பரிசு பொருட்கள் வழங்கினார். இதில் அவரது ஆதரவாளர்கள் முன்னாள் துணை மேயர் பி. எம். மன்னன், எம்.எல் .ராஜ், சோழவந்தான் ஆர்.கிரி, டி .எஸ். ராமு, பொன்ராஜ், இரும்பாடி முத்துப்பாண்டி, மற்றும் அவரது ஆதரவாளர்கள் முன்னாள் திமுக நிர்வாகிகள், நண்பர்கள், உறவினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.