• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Byவிஷா

Oct 10, 2025

எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளதால், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன. நாமக்கல்லில் நடந்த அவசர பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு, புதிய ஏல விதிமுறைகளுக்கு எதிராக டேங்கர் லாரி உரிமையாளர்கள் இந்த போராட்டத்தை அறிவித்தனர். 2025-30 ஆண்டுக்கான ஒப்பந்தங்களில் எண்ணெய் நிறுவனங்கள் 3,478 லாரிகளுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்க திட்டமிட்டுள்ளன. ஆனால் தற்போது 5,514 லாரிகள் இயங்குவதால், 2,036 லாரிகள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இது காரணமாக ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலையிழக்க வாய்ப்பு உள்ளது. உரிமையாளர்கள் பழைய ஏல விதிமுறைகளை மீண்டும் ஏற்கும்வரை வேலை நிறுத்தத்தை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் எல்பிஜி சிலிண்டர்களுக்கு கிட்டத்தட்ட தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
இவ்வாறு, மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் முக்கிய எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமா என்பது எதிர்பார்க்கப்படுகிறது.