தீபாவளி கொண்டாட்டம் காரணமாக இரண்டே நாளில் டாஸ்மாக்கில் ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரண்டே நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாளான 3ஆம் தேதி 205.61 கோடி ரூபாய்க்கும், தீபாவளி தினத்தன்று மட்டும் 225.42 கோடி ரூபாய்க்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தலைநகரான சென்னையில் மட்டும் ரூ.79.84 கோடிக்கும், கோவையில் ரூ.74.46 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியில் மட்டும் ரூ.467.69 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதிகபட்சமாக மதுரையில் 98.89 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் 89.95 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 87.89 கோடி ரூபாய்க்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.