காயமடைந்த யானைகளை தேடி கண்டுபிடிக்க கும்கியானைகளை வனத்துறையின் பயன்படுத்தி வருகின்றனர். கோவை அனைக்கட்டி பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியில் 2 வது நாளாக 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தேடும் பணியில் உதவுவதற்காக கும்கியானையான கலீம் வரவழைக்கப்பட உள்ளது. தமிழக -கேரள எல்லையில் காயத்துடன் இருந்த காட்டு யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மாயமாகி விட்டது. யானைக்கு சிகிச்சை அளிக்க இரு மாநில வனத்துறையினரும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.