கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம், லாயம் சந்திப்பில் கனிம வளங்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி சாலை ஓரத்தில் நின்ற டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தி, அருகாமையில் இருந்த வீட்டில் மதில் சுவரை இடித்து வீட்டினுள் நின்ற காரில் மோதி நின்றது-இந்த விபத்தில் கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள் முழுவதும் சேதம், அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விபத்து ஏற்படுத்திய டாரஸ் ஓட்டுனரை பிடித்து விசாரணை மேலும் டாரஸ் லாரி ஓட்டுனர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.