தேனி மாவட்டம் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவாக் ஷின் தடுப்பூசி இல்லாததால், பாதயாத்திரையாக சபரி மலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
தற்போது ஐயப்ப சீசன் துவங்கியுள்ளதால், தமிழம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்ற வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வருபவர்களின் எண்ணிக்கையும் நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. இது போன்று பக்தர்கள் வருகையால் தேனி மாவட்டத்தில் முக்கிய ரோடுகள் வாகன நெரிசலில் சிக்கி மாட்டிக் கொள்வதும் அன்றாட நிகழ்வாக உள்ளது.
பெரும்பாலான பாதயாத்திரை பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக வீரபாண்டி, கம்பம், கூடலூர் வழியாக லோயர் கேம்பை கடந்து சபரிமலைக்கு செல்கின்றனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் இன்று (ஜன.2) காலை 8 மணிக்கு கூடலூர் வந்தடைந்தனர்.
கேரள அரசு கெடுபிடி, கொரோனா தொற்று காரணமாக தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக, பக்தர்கள் சிலர் கூடலுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு கோவாக் ஷின் தடுப்பூசி இல்லை என கூறி செவிலியர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் நொந்து போன பக்தர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதுகுறித்து, அரசியல் டுடே பத்திரிகை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரத்தை கூறினர். இது சம்பந்தமாக நமது இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து நமது தாழை நியூஸ்& மீடியா அரசியல் டுடே செய்தி நிறுவனம் செய்தியாளர்கள் மூலம் உடனே மாவட்ட கலெக்டர் முரளீதரனை கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன், சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரி பக்கத்தில் இருப்பதாக கூறி, அவரிடம் இது சம்பந்தமாக கேட்டார். அதற்கு அவர், கோவாக் ஷின் தடுப்பூசி மருந்து பாட்டில் மூலம் ஒரே நேரத்தில் 20 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். 4 மணி நேரத்திற்கு மேல் இந்த மருந்தை பயன்படுத்த முடியாது. குறைந்த நபர்கள் இருந்ததால் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் சம்பந்தப்பட்ட தடுப்பூசி இல்லை என, திருப்பி அனுப்பி இருக்கலாம். இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பாதிக்கப்பட்ட ஐயப்ப பக்தர்கள், அதே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றார். ஜனநாயகத்தின் நான்காவது தூண்களில் ஒன்றான பத்திரிகைத் துறைகளும் பொறுப்போடு நடந்து கொண்டுதான் இருக்கின்றது. விழிப்புணர்வோடும் பொதுமக்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இதை உணர்ந்து தேனி மாவட்ட நிர்வாகம் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அரசியல் டுடேவின் ஆணித்தரமான கருத்தக பதிவு செய்கின்றது.
எது எப்படியோ, ஐயப்ப பக்தர்களின் நலன் கருதி மட்டுமல்லாமல் , பொதுமக்கள் நலன் கருதி கோவிஷுல்டு , கோவாக் ஷின் தடுப்பூசிகளை இல்லை என மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள்(தடுப் பூசிகள்) இல்லை கூறாமல் தேனி மாவட்ட மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இனிமேலாவது இருப்பு வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]