தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் திடீர் திடீரென சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதுடன், முகக்கவசம் அணிவது, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பல்வேறு பிரச்சாரங்கள் செய்து வருகிறார்.
மேலும் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடும் நபர்களை எச்சரிப்பது மற்றும் அவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களைப் பார்வையிடச் சென்ற மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆண்டிபட்டி பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி ,முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரித்ததுடன் அபராதமும் விதித்தார். மேலும் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்ட மாவட்ட ஆட்சியர் முகக் கவசம் அணியாமல் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளை பார்த்து உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அடுத்தவர்களின் உயிரோடு விளையாடுகிறார்களே என்று கடுமையாக எச்சரித்தார். இந்த வீடியோ தற்போது தேனி மாவட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேற்கூறிய அனைத்து செயல்களும் வரவேற்கத்தக்கது, பாரட்ட வேண்டியது.அதற்காக இதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் மற்ற விஷயங்களில் எப்போது ஆய்வு செய்வார் ஆக்ஷனில் இறங்குவார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. முககவசம் உயிர் கவசம் என்று விழிப்புணர்வு செய்யும் மாவட்ட ஆட்சியர் தங்களது மாவட்டத்தில் தடுப்பூசி போதுமான அளவில் இருக்கிறதா என்று அரசு மருத்துவமனை டீன்-யிடம் ஆலோசனை செய்து ஆய்வு செய்ய வேண்டும்.
தற்போது பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக சிறு புகார் எழுந்துள்ளது, அது சிறிய அளவில் இருக்கும் போதே சரி செய்ய வேண்டும்.அதை தவிர்த்து விட்டு பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் போது தனி ஒருவராக “எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன், எல்லாம் சரி ஆகிடும்” என்று ஆறுதல் கூறிவிட்டு அவரும் மற்ற வேலைகளில் பிஸியாகிவிடுவார்.மக்கள் மீண்டும் எதுவும் கிடைக்கவில்லை என்று போராட வேண்டி உள்ளது.
ஆகவே தொகுதி மக்களை சட்டமன்ற உறுப்பினர் வந்து சந்திக்கிறாரோ இல்லையோ மாவட்ட ஆட்சியர் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். கடமையை சரியாக செய்தால் சூப்பர் ஹீரோவாக மக்களே கொண்டாடுவார்கள்.நீங்கள் கொண்டாட அறிவுறுத்த வேண்டாம்.
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]