• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி முதல் டெ ல்லிவரை கிசான் யாத்திரை-துரை வைகோ துவக்கி வைத்தார்

பிரதமர் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கிசான்யாத்திரை துரை வைகோ கன்னியாகுமரியில் துவக்கி வைத்தார்.
அனைத்து இந்திய மாநிலங்களை சேர்ந்த விவசாய பெரும் குடி மக்கள்.2020_ம் ஆண்டில் 387நாட்கள் டெல்லியில் நடத்திய போராட்டாத்தின் முதல் வெற்றியாக.மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று கருப்பு சட்டங்களை திரும்பப்பெற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.அப்போது பிரதமர் கொடுத்த உத்தரவாதம்.இந்தியாவின் அனைத்து மாநிலங்களை கொண்ட விவசாய அமைப்பை சேர்ந்த 40_பேர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டபின்.இத்தனை ஆண்டுகளில் அந்த குழு கூடாதது மட்டும் அல்ல.உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்ததில்.

இப்போது அந்த குழுவில் எஞ்சியவர்கள் ஏழு பேர் மட்டுமே.பிரதமர் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்ற வலியுறுத்தி கன்னியாகுமரியில்(மார்ச்2)ம் தேதி தொடங்கும் இந்த நெடும் பயணத்தில் 11முதல் அமைச்சர்களை சந்தித்து எதிர் வரும் (மார்ச் 20)ம் தேதி டெல்லி சென்றடையும் என இந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.ம தி மு க வின் தலைமை கழக ஒருங்கிணைப்பாளர்.துறை வைகோ நெடும் பயணத்தின் பேருந்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.