பேரழகா..,
இன்னும் ஒரு
ஜனனத்தையே
நான் வேண்டுகிறேன் !
என் வாழ்வின்
நாட்குறிப்பு புத்தகத்தில் விட்டுப்போன பக்கங்களை எல்லாம்
உனை கொண்டு நிரப்ப !
சுகமோ அல்லது சோகமோ
உன் விரல் பற்றி
நடக்கும் நெடுந்தூர வேண்டுமடா
பள்ளம் மேடுகள் கடக்கையில்
“பார்த்துவா” எனும் உன்
கரிசனம் வேண்டுமடா
பாதி தூக்கத்தில்
உன் நெற்றி முத்தம்
நித்தம் வேண்டுமடா
இட்டு நிரப்ப ஏராள
பக்கங்கள் உண்டு !
ஏழ்பிறப்பும் தீராத
ஏக்கம் இருந்தாலும் !
இன்னும் ஒரு பிறவியாவது
எவரோடும் பகிரப்படாமல்
உனது நேசம்
எனக்கே எனக்காய் வேண்டுமடா
என் பேரழகனே!

கவிஞர் மேகலைமணியன்




