நீலகிரி மாவட்டத்தில் உறை பனி சீசன் தொடங்கியது. இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதால் தாவரவியல் பூங்கா,படகு இல்லம் உட்பட பல பகுதிகளில் உறைபனி பொழிவால் மினி காஷ்மீர் போல் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றது உதகை.
ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனியின் தாக்கம் காணப்படும். கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் மழை காரணமாக இந்த முறை பனிப்பொழிவு தாமதமாக துவங்கியுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் நீர் பனியின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உதகை நகரில் மத்திய பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகள், புல்வெளிகளில் உறைபனி தாக்கம் அதிகரித்துள்ளது,
உதகையில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதால் மினி காஷ்மீர் போல் காட்சி அளித்தது. மேலும் கடும் உறைப்பனி பொழிவின் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைப் பனி சூழ்ந்து காணப்பட்டது, இதனால் வாகனங்களில் பெட்ரோல், டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக உறைபனியின் தாக்கம் வழக்கத்தைவிட இன்று அதிகரித்துள்ளதால் அதிகாலை விவசாயம் மற்றும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் படைந்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
- எட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து
- தமிழகத்தில் 1,290 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- சென்னையில் பசுமை நிழற்பந்தல் அமைப்பு
- தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் 91.55சதவிகிதம் பேர் தேர்ச்சி
- மே 14ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
- நீதிமன்றம் சவுக்கு சங்கரின் சிகிச்சைக்காக உத்தரவை பிறப்பித்தது
- சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்கள் ஆட்சியரகப் பகுதியில் தணிக்கை முகாம்
- மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி
- குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தினம், தினம் விபத்து கண்டுகொள்ளாத காவல்துறை
- கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் கோரிக்கை கடிதம்