தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் களை கட்டியுள்ளது. திமுக, அதிமுக தவிர காங், அ.ம.மு .க, பா.ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சிறுத்தை, புதிய தமிழகம், நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ. போன்ற அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் களமிறங்குவதால் தற்போது தேர்தல் களை கட்ட துவங்கியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலே மக்கள் தொகையாலும் பரப்பளவாலும் மிகப் பெரிய நகராட்சி கடையநல்லூர் நகராட்சி! 33 வார்டுகள் கொண்ட நகராட்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் கொண்டது. இங்கு 82 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டு வருகிறார். இது தவிர 4 உதவி தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 1 முதல் 8 வது வார்டு வரை வேளாண்மை அலுவலர் சரவணன், 9 முதல் 16வது வார்டு வரை,நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், 17 முதல் 24 வது வார்டு வரை. வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர், 25 முதல் 33 வது வார்டு வரை சுகாதார ஆய்வாளர் சக்திவேல் உதவி தேர்தல் அலுவலர்களாக செயல்படுகின்றனர்.
கடையநல்லூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் கனகராஜன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் தினசரி நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் பணியாற்றி வருகின்றனர். சுகாதார அலுவலர் இளங்கோ ஆலோசனையின் பேரில் சுகாதார ஆய்வாளர் சிவா தலைமையில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், நகராட்சி அலுவலகத்திற்கு வரும் வேட்பாளர்கள், வேட்பாளரின் முகவர்கள் பொதுமக்களுக்கு சானிடைசர் வழங்கி வெப்ப பரிசோதனை செய்தும் பார்வையாளர்கள் குறித்த தகவல்களை சேமித்து வருகின்றனர்.
இதில் ஆளும் கட்சியினர் வார்டுகளில் போட்டியிட வாய்ப்பு கிட்டாதவர்களும் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டவர்களும் சுயேட்சையாக போட்டியிடுவதால் ஆளும் கட்சியினர் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக கூட்டுறவு சங்க தேர்தல் அறங்காவலர் குழு பதவிகளை தருவதாக பேசி வருகின்றனர். அஇஅதிமுக சார்பில் 33 வார்டுகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் கத்தில் முன்னிலையில் உள்ளது. முழுமையான வேட்பு மனு பரிசீலனை முடிந்த பின் கடையநல்லூர் நகராட்சியை கைப்பற்ற போவது யார் என தெரிய வரும் ஆளும் கட்சியான திமுகவில் நகர செயலர் சேகனா மூப்பன் ஹபீப், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ராசையா, தொழிலதிபர் சுந்தரமகாலிங்கம் என ஒரு படையே நகர்மன்ற தலைவர் வேட்பாளராகவும் அஇஅதிமுகவில் 2து வார்டில் போட்டியிடும் பூங்கோதை கருப்பையாவும் பாஜக சார்பில் 1வது வார்டில் போட்டியிடும் ரேவதி பாலீஸ்வரனும் தற்போது களத்தில் உள்ளனர்.
- தமிழ்நாடு பயணம் மறக்க முடியாத ஒன்று… மோடி ட்விட்…தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று […]
- லடாக் வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலிலாடக் பகுதியில் நிகழ்ந்த வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் சென்று வாகனம் சிக்கி 7பேர் பலியாகியுள்ளனர்.லடாக்கின் துர்துக் […]
- 4 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்புஉலக முழுவதும் கொரோனா தொற்று ஏற்றம் இறக்கம்த்தோடு காண்ப்படுகிறது. இந்தியாவில் 2000க்குள் இருந்த தொற்று எண்ணிக்கை […]
- நாளையுடன் விடை பெறுகிறது ‘அக்னி’..வெயில்இந்த ஆண்டுக்கான அக்னி வெயில் நாளையுடன் முடிவுக்குவருகிறது. தமிழகத்தில், கோடையின் உச்சகட்ட வெயிலான அக்னி நட்சத்திரம் […]
- போதைப்பொருள் வழக்கில் ஷாருக் கான் மகன் விடுவிப்பு..!பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.தற்போது போதிய ஆதாரம் […]
- ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் என்பது ஏற்கத்தக்கதல்லஇருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் அப்படி ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 […]
- மீண்டும் பிகில் ராயப்பன் என்ட்ரியா..?? அட்லி சொன்ன பதில்..தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படம் மூலம் அட்லி இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு […]
- பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க வேண்டாம்… ஷாருக்கான், அஜய்தேவ்கனுக்கு கடிதம் எழுதிய ரசிகை..பான்மசாலா விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக முன்னணி இந்தி நடிகர்கள் மீது சமீப காலங்களாக கடுமையான விமர்சனங்கள் […]
- லெஜண்ட் படத்தின் ஆடியோ லான்ச்… 10 முன்னனி நடிகைகள் அழைப்பு…லெஜண்ட் சரவணன் நடிக்கும் முதல் படத்துக்காக 10 முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள உள்ளதைப் பார்த்து கோலிவுட்டே […]
- 10,12ம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசு வேலை ரெடிஅரசு வேலை என்றாலே சந்தோசம் அதிலும் மத்திய அரசு வேலை என்றால் சொல்லவா வேண்டும்.. மத்திய […]
- பிளஸ்1 படிக்கும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைதமிழக்ததை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைகிடைத்துள்ளது.தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் […]
- புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடைஇளைஞர்களின் உடல்நலன் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு மேலும் ஒராண்டுதடைவிதித்து தமிழக அரசு […]
- பள்ளி குறித்த திட்டங்களுக்கு தமிழில் பெயர்… முதல்வர் பேச்சுதமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை […]
- யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த சிறுவனுக்கு நூதுன தண்டனை..உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது […]
- ஸ்டாலினின் மோசமான நடத்தையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன் -அண்ணாமலை டூவிட்பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை […]