அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்புக்கு பின் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது.இபிஎஸ் மீண்டும் இடைக்கால பொதுச்செயலாளராகசெயல்பட உள்ளார். மேலும் ஓபிஎஸ் அவரது மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட உத்தரவு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் கலக்கத்தில் ஆழ்ந்துள்ள ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார் ஓபிஎஸ்.