• Sat. Apr 20th, 2024

ஜெயலலிதா மரணம் அறிக்கை: 29-ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல்

ByA.Tamilselvan

Aug 27, 2022

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை வரும் 29ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல்,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று காலை தாக்கல் செய்தார். தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29-ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. முதல்வர், சட்டத்துறை அமைச்சரிடம் அறிக்கை தரப்பட்ட நிலையில் அமைச்சரவை கூட்டத்திலும் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *