• Fri. Apr 19th, 2024

அலங்காநல்லூர் அருகே ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

ByKalamegam Viswanathan

Mar 8, 2023

அலங்காநல்லூர் அருகே அரியூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பங்கேற்பு.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் அரியூர் கிராமத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கல்லணை ரவிச்சந்திரன், கொரியர் கணேசன், வாடிப்பட்டி காளிதாஸ், வாடிப்பட்டி ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி சாமிநாதன் வரவேற்றார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், அம்மா பேரவை செயலாளர், மதுரை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ராசு, கூட்டுறவு சங்க தலைவர் மலர் கண்ணன்,எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் குருசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டுறவு வங்கி துணைத் தலைவர், கிளை செயலாளர் ராகுல் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *