• Sat. Mar 25th, 2023

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மகளிர் தினவிழா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்கள் மற்றும் பெண் அமைச்சுப் பணியாளர்களுக்கு குடும்பத்துடன் வந்து வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப்பணியாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . D. N.ஹரி கிரன் பிரசாத் IPS நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்- மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகளிர் காவல்துறையினர் மற்றும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். மகளிர் அமைச்சுப்பணியாளர்களுக்கு நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு வாழவும், சிறப்பாக பணியாற்றவும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் அனைத்து மகளிர் காவல்துறையினர் மற்றும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .ஈஸ்வரன், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *