• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஜெ. மரண அறிக்கையின் இறுதி பக்கத்தில் இருந்த திருக்குறள் !!!!

ByA.Tamilselvan

Oct 18, 2022

ஜெ.மரண அறிக்கையில் இறுதி பக்கத்தில் உள்ள திருக்குறளின் அர்த்தம் இது தான்.
சட்டசபையில் இன்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையால் அதிமுவுக்கும் , தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் இறுதியில் “காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு” என்ற திருக்குறள் இடம் பெற்றுள்ளது.இந்த திருக்குறளின் விளக்கம் என்னவென்றால் “வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை ,சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக்கொன்று விடும்” என்பதாகும்.இந்த குறள் மூலம் யானைபோன்ற பலமிக்க ஜெயலலிதாவை நரிகள் போன்ற சிலர் சேர்ந்து கொன்று விட்டதாக மறைமுக பொருளும் அடங்கி இருக்கிறது