• Sat. Apr 20th, 2024

உச்சநீதிமன்றத்தில் கொரோனாவால் 8 நீதிபதிகள் தனிமை

உச்சநீதிமன்றத்தில் மிக கடுமையாக கொரோனா பரவியுள்ளதால் தற்போது வரை 8 நீதிபதிகள் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கொரோனா 3 ஆவது அலை , முதல் இரண்டு அலைகளை ஒப்பிடும்போது பரவும் வேகம் மிக மிக அதிகமாக இருக்கிறது . அதுவும் தலைநகர் டெல்லியில் பரவல் வேகம் மிக அதிகமாக இருக்கிறது. இதனையடுத்து கடந்த மாதம் முதலே உச்சநீதிமன்றம் முழுமையாக காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு மாறியது . இதுவரை 3 ஆவது அலையில் மட்டும் 10 நீதிபதிகளுக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.

இந்நிலையில் , இரண்டு பேர் குணமடைந்து விட்டனர் எனினும் மீதமுள்ள 8 பேர் தற்போது தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் ஊழியர்களை பொறுத்தவரை 400 இல் இருந்து 1200 பேர் வரை சமீபத்தில் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் என தகவல்கள் சொல்லப்படுகிறது . வழக்கறிஞர்கள் அவர்களுடைய உதவியாளர்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுவதால் நீதிமன்ற நடவடிக்கைகள் தடைபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *