ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள சத்யாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக இருந்த பதவிகளுக்கு பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 21 மாநகராட்சி, 138 நகராட்சிகள், 489 பேருராட்சிகளில் 95 சதவீத இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. கும்பகோணம் நீங்கலாக சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 20 மாநகராட்சி மேயராக திமுகவினர் பதவியேற்றனர். சென்னை மேயராக 28 வயது இளம்பெண் பிரியா ராஜன், கோவையில் கல்பனா என 11 பெண்கள் மேயராக பதவியேற்றுக்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியை பொறுத்தவரையில் திமுக – 21, அதிமுக – 16, இந்திய காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சிகள் தலா – 1, சுயேச்சைகள் 5 பேர் வெற்றி பெற்றனர். 45 வார்டுகள் கொண்ட ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் மறைமுக தேர்தலில் வெற்றி பெற 23 வாக்குகள் வேண்டும், இதனால் யார் மேயர் என்பதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது. ஒருவழியாக திமுக சார்பில் 23 வார்டில் போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
சத்யாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சுயேச்சையாக வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வாக்களித்ததால் 27 வாக்குகள் பெற்று 9 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில், முக்கியமான தகவல் என்னவென்றால், ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்வுக்கான மறைமுக தேர்தலில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் வேட்பாளர்கள் பெயர் அச்சிடப்பட்டிருந்தது.
ஓசூர் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.ஏ.சத்யா தனது பிரமாண பத்திரத்தில் அசையும் சொத்துக்கள் மதிப்பு – ரூ.23 கோடியே 36 லட்சத்து மூவாயிரத்து 305, சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்தின் மதிப்பு -ரூ.1 கோடியே 21 லட்சத்து எட்டாயிரத்து 600, மேம்பாடு மற்றும் கட்டுமானத்திற்கான செலவிடப்பட்ட தொகை 69 லட்சம், சுய சம்பாத்திய சொத்துக்கள் – ரூ.2 கோடியே 5 லட்சம், பரம்பரை சொத்து 15 லட்சம் என மொத்தமாக ரூ.2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கான சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி திமுகவினரே இவ்வளவு தேர்தல் கணக்கிலேயே இவ்வளவு சொத்துக்கள் காட்டப்பட்டுள்ளதா என ஆச்சரியத்துடன் பார்க்கின்றனராம்.
- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]