சிஸ்டம் சரியில்லை.. அதனால் தான் அரசியலுக்கு வரப் போகிறேன் என ரஜினிகாந்த் முன்னதாக கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர் பஞ்ச் கொடுக்கும் விதமாக நடிகர் அஜித் குமார் வலிமை படத்தில் பேசியிருக்கும் காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.. மேலும் இது இரு தரப்புக்கும் சர்ச்சையையும் சண்டையையும் உருவாக்கி உள்ளது.
பல ஆண்டுகளாக அரசியலுக்கு வரப் போகிறேன் என கூறிக் கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், அச்சமயத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டங்களில், சிஸ்டம் சரியில்லை. அதை சரி செய்யவே அரசியலில் இறங்கப் போகிறேன் என்று கூறினார். மேலும், இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை என்று தொடங்கியவர், இறுதியாக இப்பவும் இல்லை இனி எப்பவும் இல்லை என தனது அரசியல் பயணத்தை முடித்துக்கொண்டார்!
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள அஜித் குமாரின் வலிமை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் ஒன்றில், ரஜினியின் வசனத்தை கிளறும் வகையில் உள்ளதாக ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். நடிகர் அஜித் குமார் இந்த வசனத்தை எப்படி ஓகே செய்து பேசினார் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
வலிமை படத்தில் அம்மாவிடன் அர்ஜுன் கதாபாத்திரம் பேசும் வசனத்தில், நடிகர் அஜித் குமார், கவர்மென்ட் சரியில்லை.. சிஸ்டம் சரியில்லைன்னு திட்றோம்.. ஆனால், நமக்குன்னு ஒரு பிரச்சனை வரப்ப.. நேர்மையா இருக்காமா சுயநலம் ஆகிடுறோம்.. நாம தான சிஸ்டம்.. நாம சரியா இருந்தாதான சிஸ்டம் சரியா இருக்கும் என பேசியுள்ள வசனம் தான் தற்போது சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
ரஜினியை டார்கெட் செய்ய வேண்டும் என்றே இப்படியொரு வசனத்தை படத்தில் வைத்தார்களா? என்கிற கேள்வியும், வலிமை படம் தியேட்டரில் வெளியாகி உள்ள நிலையில், அதன் காட்சிகளை எப்படி ரசிகர்கள் செல்போன் மூலம் வீடியோவாக எடுத்து இப்படி ஷேர் செய்கின்றனர் என்கிற கேள்வியும் தற்போது விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது!
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]