தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் இறுதி செய்யும் பணியில் உள்ளனர்.
சமீபத்தில் பாஜக செய்த ஒரு சம்பவம் காரணமாக அதிமுக பாஜகவை கழட்டிவிட்டு தனியாக களம் காண்கிறது. இதே போல பாஜகவும் இந்த முறை தனித்து போட்டியிட்டு தங்களது செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. அதனால் இந்த முறை அரசியல் களம் மிகவும் பரபரப்பாக 9 முனை போட்டியாக உள்ளது.
இந்நிலையில் திமுக இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு 21 மாநகராட்சியை தங்களுடையது என்று ஒரு மனக்கோட்டையை கட்டிக்கொண்டு உள்ளது. ஆம் , திமுக அரசு பொறுப்பேற்று கிட்ட தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டது. நீட் தேர்வில் ஆளுநருடன் மோதல் , டெல்லியில் குடியரசு தினவிழாவின் போது தமிழக ஊர்திகள் நிராகரிக்கபட்டது என பல செயல்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதிலடி கொடுத்தாலும், இது தேர்தல் களத்தில் எதிரொலிக்காது.
திமுக ஆட்சிக்கு வரும் முன்னரே வாயை கொடுத்து மாட்டிவிட்டது. முதல் கையெழுத்து நீட் விலக்கு, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என தங்களது தேர்தல் அறிக்கையில் வானத்திற்கு பூமிக்குமாய் வாக்குறுதி கொடுத்து மாட்டிக்கொண்டனர்.
அதிமுக – பாஜக கூட்டணி முறிவினால் பாஜக பிராதனமாக எடுக்ககூடிய பிரச்சனை தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் சட்ட ஒழுங்கு பிரச்சனை கோயில்கள் இடிப்பு என மத ரீதியிலான பிரச்சனையை திமுக எதிர்ப்பு பிரச்சாரத்தை தான் முன்னெடுக்கும். இதனை திமுக தந்திரமாக கையாண்டாலும் சில விஷயங்கள் திமுகவிற்கு பாதகமாக முடியும் என்று தான் கள நிலவரங்கள் கூறுகின்றன.
முதல் பிரச்சனை குடும்ப பெண்களுக்கான மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1000 கிடப்பில் போடப்பட்டது.மேலும் நகைக்கடன் தள்ளுபடி விஷயத்திலும் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறியது.
ஜனவரியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு தர குறைவான முறைகேடு பிரச்சனை அதனை முதலமைச்சர் ஸ்டாலின் கையாண்ட விதம் இவை அனைத்துமே திமுகவிற்கு அதிருப்தி வாக்குகளாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் பொங்கல் தொகுப்பில் தரக்குறைபாடு பிரச்சனை எழுந்த உடனே முதலமைச்சர் முக ஸ்டாலின் ரேஷன் கடையில் ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றவர். தொகுப்புகளை பிரித்து பார்த்து தரத்தினை சோதிக்காமல் அப்படியே முதல்வன் பட அர்ஜுன் பாணியில் கடைகளில் மட்டும் ஒரு விசிட் செய்து விட்டு சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட சென்னையும் திமுகவிற்கு சற்று போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.முதலமைச்சரின் சொந்த தொகுதியில் இருந்த மக்கள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வெளியேற்றப்பட்டு வீடுகள் இடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் பெத்தேல்நகர் மக்கள் வீடுகளும் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அந்த மக்கள் வீதியில் இறங்கி போராடியது.உங்கள நம்பி தான் வாக்களித்தோம் அதுக்கு நீங்க காட்டுற விசுவாசம் இதுதானா என்று கேட்கும் கேள்விகள் திமுகவின் வெற்றி வாய்ப்பை குறித்து தான் கேட்கப்படுகிறது.
சேலம் தருமபுரி கோவை ஆகிய மூன்று பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் மற்ற பகுதிகளை தங்களது கட்டுபாட்டுக்குள் வைத்துகொள்ள மறந்துவிட்டார். மேலும் தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை திமுக தலைமையிலான அரசு கையாண்ட விதம் கூட சொந்த கட்சியினரிடையே சற்று சல சலப்பை ஏற்படுத்தி உள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அதிருப்தி ஓட்டுகள் திமுகவிற்கு சாதகமாக அமைந்து வெற்றிவாய்ப்பை உறுதி செய்தது. அதுபோன்று இந்த நகர்ப்புற தேர்தலிலும் அப்படி ஒரு மேஜிக் நடைபெற்றாக வேண்டிய சூழ்நிலையில் திமுக உள்ளது என்பது இப்போதைய கள நிலவரம்.
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]
- ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என […]
- மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை 97 […]
- டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடிதேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு […]
- 12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே […]
- எலிசபெத் ராணியின் நினைவாக மிகப் பெரிய தங்க நாணயம் வெளியீடு…பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி […]
- நடிகர் போண்டாமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு…பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]