• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

சிபிஎம் வேட்பாளர் பாண்டிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட ஐ. பெரியசாமி..,

ByVasanth Siddharthan

Apr 18, 2026

பழனி சட்டமன்றத் தொகுதி பைரவன் கோவில் தெரு ,பட்டத்துவிநாயகர் கோவில் , ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சிபிஎம் வேட்பாளர் பாண்டி அவர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, செய்தியார்களிடம் கூறியதாவது :

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்துக் கேட்டதற்கு, “யார் அண்ணாமலையா? அவர் என்ன நீதிபதியா? அரசியல் விளம்பரத்திற்காக அவர் இப்படிப் பேசுகிறார். என் மீது எந்த வழக்கும் இல்லை. தேர்தலுக்காகப் போடப்பட்ட 13 வழக்குகளும் முடிந்துவிட்டன. என் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்ததாகச் சொல்வதெல்லாம் பொய், அவர்கள் வந்து டீ குடித்துவிட்டுத்தான் சென்றார்கள். வரும் 21-ஆம் தேதியோடு இவர்களின் சாயம் வெளுத்துவிடும்” எனப் பதிலடி கொடுத்தார்.

தொகுதி மறுவரையறை குறித்துப் பேசிய அமைச்சர், “எடப்பாடி பழனிசாமி அந்த மசோதாவை முழுமையாகப் படிக்காமல் பேசுகிறார். தமிழ்நாட்டிற்கு எத்தனை இடங்கள் வரும் என்று அந்த மசோதாவில் ஏன் சொல்லவில்லை? தென் மாநிலங்களுக்கு எத்தனை இடங்கள் என்று அமித்ஷா ஏன் குறிப்பிடவில்லை? சட்டம் என்று கொண்டு வந்தால் அதில் தெளிவான எண்ணிக்கை இருக்க வேண்டும். சும்மா வாயால் சொன்னால் போதுமா?” என அமித்ஷாவிற்கு நேரடி சவால் விடுத்தார்.

மகளிர் இடஒதுக்கீட்டை திமுக தடுத்ததாகச் சொல்லப்படுவதை மறுத்த அவர், “மகளிருக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர். இப்போது முதல்வர் ஸ்டாலின் 50% வழங்கியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக மோடி அரசு ஏன் இந்த மசோதாவை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தியது? நிர்மலா சீதாராமன் சொல்வது போலத் தமிழ்நாடு எதையும் இழக்காது. திமுக தன்மானமுள்ள இயக்கம், சொந்தக் காலில் நிற்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது எட்டாக்கனி என்ற தவெக தலைவர் நடிகர் விஜய் கருத்திற்குப் பதிலளித்த அவர், “நிச்சயமாகச் சொல்கிறேன், இரண்டாவது முறை மட்டுமல்ல, மூன்றாவது முறையும் திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும். பாருங்கள் என்றார்.