தீர்க்கமாக உழைத்தால், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் 100க்கு 100 சதவீதம் வெற்றி ‘வாகை’ சூடலாம் என, தேனியில் நடந்த தி.மு.க., ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார்.
தேனி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தேனி என்.ஆர்.டி., நகரில் அமைந்துள்ள ஐ.எம்.ஏ., மஹாலில் நேற்று (ஜன.30) மாலை 6:30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து,
அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியதாவது:
கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பத்து, பதினைந்து ஆண்டுகள் தளபதியார் அவர்கள் தான் முதல்வராக இருப்பார். முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தேர்தல் மட்டும் நின்று விட்டது. தற்போது வந்து விட்டது.
15 வார்டு இருந்தாலும், அதில் 14 வார்டுகள் வரை வெற்றி வாகை சூட முயற்ச்சிக்க வேண்டும்.
கூட்டணி கட்சியில் காங்., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., ஏ.ஐ.எப்.பி., மற்றும் ஏ.டி.பி., உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இதனால் கூட்டணி ஒதுக்குவதில் சிரமம் உள்ளது. கூட்டணிக்கு ஒதுக்கி கொடுத்தாலும், அவை வெற்றி பெற வேண்டும்.
இப்போது ஆளுகின்ற இயக்கமாக இருக்கின்ற கால கட்டத்தில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் கேட்கின்ற பொழுது அதை பேசி ‘சீட்’ கேட்பர்.
நமக்கு நாட்கள் குறைவாக இருக்கிறது. நிமிடம் குறைவாக இருக்கிறது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் வேட்பாளர் பட்டியலை தலைமைக்கு எழுதி அனுப்ப வேண்டும். பேரூராட்சிகள், நகராட்சிகளில் நிற்பவர்களை அரவணைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
கம்பம் மாவட்ட பொறுப்பாளருக்கு திடீர் என்று உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அந்த பணிகளை எல்லாம் மற்ற கழக நிர்வாகிகள் மோற்கொள்வார்கள்.
நாம் அனைவருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இன்னும் நாட்கள் குறைவாகவே இருக்கு, நமது பொறுப்பாளர்கள் என்னென்ன பணிகளை கொடுக்கிறார்களே அந்தந்த பணிகளை நிர்வாகிகள் திறம்பட மேற்கொள்ள வேண்டும். நாம் தீர்க்கமாக செயல்பட்டால் 100க்கு100 சதவீதம் வெற்றியை பெறுவோம்.
நமது மாவட்ட பொறுப்பாளர் பல்வேறு அறிவுறிகளை வழங்கி யுள்ளார். இந்தியாவின் முதன்மையான முதல்வர் அவர்களுக்கு வெற்றியை உரித்தாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ., க்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்), தேனி நகர பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் உள்ளிட்ட வடக்கு, தெற்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]