தீர்க்கமாக உழைத்தால், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் 100க்கு 100 சதவீதம் வெற்றி ‘வாகை’ சூடலாம் என, தேனியில் நடந்த தி.மு.க., ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார்.
தேனி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தேனி என்.ஆர்.டி., நகரில் அமைந்துள்ள ஐ.எம்.ஏ., மஹாலில் நேற்று (ஜன.30) மாலை 6:30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து,
அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியதாவது:
கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பத்து, பதினைந்து ஆண்டுகள் தளபதியார் அவர்கள் தான் முதல்வராக இருப்பார். முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தேர்தல் மட்டும் நின்று விட்டது. தற்போது வந்து விட்டது.
15 வார்டு இருந்தாலும், அதில் 14 வார்டுகள் வரை வெற்றி வாகை சூட முயற்ச்சிக்க வேண்டும்.
கூட்டணி கட்சியில் காங்., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., ஏ.ஐ.எப்.பி., மற்றும் ஏ.டி.பி., உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இதனால் கூட்டணி ஒதுக்குவதில் சிரமம் உள்ளது. கூட்டணிக்கு ஒதுக்கி கொடுத்தாலும், அவை வெற்றி பெற வேண்டும்.
இப்போது ஆளுகின்ற இயக்கமாக இருக்கின்ற கால கட்டத்தில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் கேட்கின்ற பொழுது அதை பேசி ‘சீட்’ கேட்பர்.
நமக்கு நாட்கள் குறைவாக இருக்கிறது. நிமிடம் குறைவாக இருக்கிறது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் வேட்பாளர் பட்டியலை தலைமைக்கு எழுதி அனுப்ப வேண்டும். பேரூராட்சிகள், நகராட்சிகளில் நிற்பவர்களை அரவணைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
கம்பம் மாவட்ட பொறுப்பாளருக்கு திடீர் என்று உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அந்த பணிகளை எல்லாம் மற்ற கழக நிர்வாகிகள் மோற்கொள்வார்கள்.
நாம் அனைவருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இன்னும் நாட்கள் குறைவாகவே இருக்கு, நமது பொறுப்பாளர்கள் என்னென்ன பணிகளை கொடுக்கிறார்களே அந்தந்த பணிகளை நிர்வாகிகள் திறம்பட மேற்கொள்ள வேண்டும். நாம் தீர்க்கமாக செயல்பட்டால் 100க்கு100 சதவீதம் வெற்றியை பெறுவோம்.
நமது மாவட்ட பொறுப்பாளர் பல்வேறு அறிவுறிகளை வழங்கி யுள்ளார். இந்தியாவின் முதன்மையான முதல்வர் அவர்களுக்கு வெற்றியை உரித்தாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ., க்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்), தேனி நகர பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் உள்ளிட்ட வடக்கு, தெற்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]