• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குழந்தைகள் வாழத் தகுதியற்ற இடமா தமிழ்நாடு ? அன்புமணி ராமதாஸ் கேள்வி

ByA.Tamilselvan

Sep 1, 2022

குழந்தைகள் வாழத் தகுதியற்ற இடமாக தமிழ்நாடு மாறிவிட்டதா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் கூறும் போது “தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021ம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட 39.80 % அதிகரித்துள்ளது. ஒராண்டில் குழந்தைகளுக்கு எதிரான 6,064 குற்றங்கள் பதிவாகி உள்ளன. இவற்றில் 4456 போக்சோ வழக்குகள், அதனால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.