புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று அல்லது நாளை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஜனாதிபதி செயலக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.குறுகிய காலத்திற்கேனும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோரியதாகவும், அவரின் அழைப்பை ஏற்று பிரதமர் பதவியை பொறுப்பேற்க ரணில் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.இதன் போது ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்றுவரும் அமைதியான போராட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என ரணில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்பரப்பில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிக்க ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பெரும்பான்மை ஆதரவுடன் ரணில் பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- குறள் 232:உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்றுஈவார்மேல் நிற்கும் புகழ். பொருள் (மு.வ):போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் […]
- விசுவாசத்தைப் பற்றி பேசுவதற்கு ராஜன்செல்லப்பா குடும்பத்திற்கு தகுதியில்லை.., எஸ்.எஸ்.கதிரவன் குற்றச்சாட்டு!தற்போதைய திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜன்செல்லப்பாவின் அரசியல் […]
- அதிமுகவை பற்றி எம்ஜிஆர் உயில் எழுதி வைத்துள்ளார்! செல்லூர் ராஜூ உருக்கம்..80 சதவீதம் தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்களோ அவர்கள் பக்கம் அதிமுக இருக்கும் என எம்ஜிஆர் […]
- ஓபிஎஸ் நிஜத்தில் வில்லன் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!அதிமுகவில் ஈபிஎஸ்க்கு பச்சைகொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், எஸ்எஸ்டி, திருநாவுக்கரசர் போன்று ஓபிஎஸ்க்கு நிலை ஏற்படும், […]
- என்னுடைய எதிர்காலத்தை தொண்டர்கள்தான் தீர்மானிப்பார்கள்! ஓபிஎஸ் பரபரப்பான பேச்சு…பெரியகுளம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு மதுரை […]
- ஓபிஎஸ் நிஜத்தில் வில்லன் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!அதிமுகவில் ஈபிஎஸ்க்கு பச்சைகொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், எஸ்எஸ்டி, திருநாவுக்கரசர் போன்று ஓபிஎஸ்க்கு நிலை ஏற்படும், […]
- டாக்டர் அழகு ராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்திப்புடாக்டர் அழகுராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்தி்தது பேசி வருகின்றனர்இது குறித்து டாக்டர் அழகுராஜா கூறுகையில் விழுப்புரத்தின் […]
- அமைச்சர் அர.சக்கரபாணியுடன் டாக்டர் அழகுராஜா சந்திப்புதமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியுடன்டாக்டர் அழகுராஜா மரியாதை நிமித்தமாக சந்திப்பு. இச்சந்திப்பு […]
- நூலிழையில் உயிர் தப்பி முதல்வர்ஹெலிகாப்டர் விபத்தில் உ..பி.முதல்வர் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டரில் […]
- 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நாளை வெளியீடுநாளை காலை 10 மணியளவில் 11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறதுதமிழகம் மற்றும் புதுச்சேரியில் […]
- டிடிவி தினகரனோடு ரகசியமாக பேசிய ஓபிஎஸ் -ஆர் .பி. உதயகுமார்ஓ.பன்னீர்செல்வம் ,டிடிவி தினகரனோடு ரகசியமாக பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து முன்னாள் அமைச்சர் […]
- ஆளுக்கொரு பாதையில் பயணிக்கும் ஓபிஎஸ்,இபிஎஸ்,சசிகலாசசிகலா தமிழகம் முழவதும் சுற்றுபயணம் மேற்கொண்டுவருகிறார். அதேபோல ஓபிஎஸ்,இபிஎஸ் ஆளுக்கொரு பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.அதிமுகவில் ஓபிஎஸ்,இபிஎஸ் […]
- சர்வதேச அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வுசர்வதேச போட்டியில் அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருநங்கைகளுக்கானசர்வதேச அழகிப்போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா […]
- சூ சூ வென் விரட்டினாள் போகுமா போகுமா!வெள்ளைக்காரன் தந்தஇந்தியாவைபிந்தி வந்தவன்ஹிந்தி கற்கச் சொல்லிமன்கிபாத் நடத்துகிறான்.கல்லுக்குள் புகுந்த தேரையாய்பாராளுமன்றத்தில்நுழைந்த சீம துரைஎல்லாம் ஒரே, ஒரேவெனஒப்பாரி […]
- குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் ஊரில் இன்னும் மின்சார வசதியில்லைகுடியரசுத் தலைவா் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முா்முபோட்டியிடு கிறார். […]