மனைவியுடன் கட்டாய உறவு கொள்வது குறித்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் குழப்பம் நீடிக்கிறது.
மனைவி சம்மதமின்றி கணவன் வலியுறுத்தி ஈடுபடும் கட்டாய உறவை குற்றமாக்க கோரி, ஆஐடி பவுண்டேஷன், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்டு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தாம்பத்திய வல்லுறவு மேற்கத்திய நாடுகளில் குற்றமாக்கப்பட்டுள்ளது. அதற்காக கண்மூடித்தனமாக இந்தியாவும் பின்பற்ற வேண்டியதில்லை. மனைவியுடன் கட்டாய உறவை குற்றமாக்குவதற்கு முன், நமது நாட்டிற்கே உரிய எழுத்தறிவு, பெரும்பாலான பெண்களுக்கு இல்லாமல் இருக்கும் நிதி அதிகாரம், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள், ஏழ்மை ஆகியவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும், என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த ரிட் மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பு, எதிர் மனுதாரர்கள் தரப்பு வாதங்களை கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேரும் முரண்பட்ட தீர்ப்பை கூறியுள்ளனர். மனு தொடர்பாக நீதிபதி ராஜீவ் ஷக்தர் வழங்கிய தீர்ப்பில், தாம்பத்ய வல்லுறவு குற்றமாகாது என விலக்கு அளிக்கும் பிரிவு அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானது, என்றார்.
நீதிபதி ஹரிசங்கர் முரண்பட்டு, தாம்பத்ய வல்லுறவு குற்றமாகாது என விலக்கு அளிக்கும் பிரிவு அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது இல்லை. புரிந்துகொள்ளத்தக்க வேறுபாட்டின் மூலம் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, என்று தனது தீர்ப்பில் தெரிவித்தார். மேலும் இந்த முரண்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் மனுதாரர்களுக்கு அனுமதி அளித்தனர்.
- திருப்பரங்குன்றத்தில் ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மோட்ச தீபம்திருப்பரங்குன்றம் அருகே வராஹி அம்மன் கோவிலில் ஒரிசாவில் ரயில் விபத்தில் பலியானவர்களுக்குமோட்ச தீபம் ஏற்றப்பட்டதுமதுரை மாவட்டம் […]
- இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய்10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்;2019ம் ஆண்டில் […]
- திருப்பரங்குன்றம் உண்டியல் வருமானம் ரூ52 லட்சம் உட்பட தங்கம், வெள்ளி பொருட்கள் கிடைத்தனதிருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.52 லட்சம் தங்கம் 253 கிராம். வெள்ளி 2 கிலோ […]
- அடியாட்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த முயல்வதாக நில அளவையருடன் வாக்குவாதம்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அடியாட்கள் மூலம் கையகப்படுத்த முயல்வதாக […]
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]