சசிகலா அதிமுகவிற்கு மீண்டும் வந்தால் எடப்பாடி பழனிச்சாமி இருப்பாரா? அவரது நிலை இப்போது எப்படி இருக்கிறது? மற்ற அமைச்சர்கள் அமைதி காப்பது ஏன்? அவர்கள் சசிகலா வருகை எதிர்பார்க்கிறார்களா அல்லது ஏற்றுக் கொள்கிறார்களா? என்கிற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரும் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் சசிகலா அதிமுகவில் இணைவதையும் வரவேற்பதையும் விரும்பவில்லை. ஆனால் பெரும்பாலான தொண்டர்களின் எண்ணம் சசிகலாவின் கீழ் அதிமுக வர வேண்டும் என்பதாகவே உள்ளது.
தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றக் கூடும். சசிகலாவை ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளி வருகின்றன. அப்படியிருக்கும் போது இதற்கு நேர் எதிராக எடப்பாடி பழனிச்சாமி, எஸ். பி வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் என்ன செய்வார்கள்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சசிகலாவை வருகையை எதிர்ப்பது அல்லது ஏற்பது. சசிகலா வருகையை ஏற்றாலும் தினகரன் வருகையை எப்படி பழனிச்சாமி உள்ளிட்டோர் நிச்சயம் ஏற்க மாட்டார்கள்.
அப்படி என்றால் கட்சி இரண்டாக பிரியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது, டிடிவி தலைமையில் ஒரு அணியாகவும் சசிகலா ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியாகவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மூன்றாவது அணியாக அமைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அதிமுகவின் நிலைமை முக்குலத்தோர் மற்றும் கவுண்டர்கள் பெரும்பான்மை உள்ளவர்களாக தான் உள்ளது. பொது மக்களின் ஓட்டுகள் மாறும் என்பதால் அதனை பெரிதாக எடுத்து கொள்வது கிடையாது. தற்போது எடப்பாடி இருக்கும் வாய்ப்புகளில் மீண்டும் சசிகலாவை கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை, ஆனால் சசிகலா உறுதியாக பாஜக உதவியுடன் உள்ளே வரும் பட்சத்தில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா பக்கம் வந்து விடுவார். அன்று சசிகலாவை வசைபாடிய மாஜிக்கள் ஒதுக்கப்படும் போது பெரும்பான்மையான முக்குலத்தோர் வாக்குகள் சசிகலாவிற்கு ஆதரவாக தான் முடியும். ஆனால் அதிமுகவின் கொங்கு பெல்ட் அப்படி அல்ல அது எந்த நிலையிலும் மாறக்கூடியது. ஆனால் சட்டமன்றத் தேர்தலில் தென் தமிழகம் அதிமுகவின் காலை வாரிய போது கூட மேற்கு மண்டலமான கொங்கு மண்டலம் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்தது.
தற்போது அந்த எண்ணத்தில் அதிமுக தமக்கு சரியாக வரவில்லை என்றால் தன்னை கவுண்டர் சமுதாய மக்கள் கைவிட மாட்டார்கள் அவர்களுக்காக உழைக்காமல் வேறு யாருக்காக உழைக்கபோகிறேன் என்று ஜாதி கட்சி தலைவராக உருவாகவும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் கொங்கு வட்டாரத்தை சேர்ந்தவர்கள். பெரும்பான்மை செல்வ வளம் பொருந்திய கொங்கு மண்டலத்தில் மணி சகோதரர்கள் கிட்ட தட்ட கை கழுவும் நிலையில் உள்ளனர். அது வெளிப்படையாக தெரிவதற்கு முன்பே இது போன்ற திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருவதாக தகவல். இல்லையென்றால் தனது சுய லாபத்திற்காக எடப்பாடி பழனிசாமி நிச்சயம் மனம் மாறுவார் என்கிறார்கள். அப்படி மாறவில்லை என்றால் கவுண்டர்கள், தேவர்கள் என அதிமுக உடையலாம். ஆனாலும், அதற்கு வாய்ப்பு இருக்காது என்கின்றனர்.
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]