• Sat. Apr 20th, 2024

தமிழகத்தில் உதயமாகிறதா புதிய மாவட்டம் ?

ByA.Tamilselvan

Jan 22, 2023

புதிய மாவட்டங்களை உருவாக்கவேண்டும் தமிழக முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை
எழுதியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 25 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 8 ஆகும். மக்கள் தொகை அடிப்படை யில், தற்போதைய நிலையில் பெரிய மாவட்டம் திருவள்ளூர் ஆகும். அதன் மக்கள் தொகை 37 லட்சம். அடுத்து சேலம், கோவை ஆகிய மாவட்டங்கள் தலா 35 லட்சம் மக்கள் தொகையுடன் அடுத்த இரு இடங்களை வகிக்கின்றன. இந்த மாவட்டங்கள் உலகில் உள்ள 103 நாடுகளை விட அதிக மக்கள் தொகை கொண்டவை.
ஒரு நாட்டை விட ஒரு மாவட்டத்தின் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் போது, அங்கு வளர்ச்சி சாத்தியமாகாது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அரசு அமைக்க வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டங்களையும் பிரித்து, 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *