• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்…

Byகாயத்ரி

Mar 30, 2022

புதுச்சேரியில் 15-வது சட்டசபையின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 23-ம் தேதி கூட்டப்பட்டது. அனைத்து அலுவல்களும் அன்றைய தினமே நிறைவேறியதால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் பேரவை கூடத்தில் மீண்டும் கூட்டப்படுகிறது.இந்தக் கூட்டத்தொடரின்போது 2022-23-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை (இடைக்கால பட்ஜெட்) குறித்த மசோதாவினை சட்டசபையில் நிதித்துறை பொறுப்பினை வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.சட்டசபை முடிந்தபிறகு தொடர்ந்து சட்டசபை நடத்தப்படுமா அல்லது ஒருநாள் மட்டும் நடத்தப்படுமா என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.