கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் திமுக பிரமுகரான மீனா ஜெயகுமாரின் வீடு, அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம், சௌரிபாளையம் காசாகிரான்ட் அலுவலகம்,அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில் குமார் இல்லத்தில்,திமுக முன்னாள் கவுன்சார் எஸ்.எம் சாமி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்தது. சில இடங்களில் சோதனை நிறைவு பெற்ற நிலையில் மீனா ஜெயக்குனாரின் இல்லம், அவரது மகனின் அலுவலகம் மட்டும் சோதனை தொடர்ந்து வந்தது. 6 நாட்களாக நடைபெற்று வந்த இந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது.