


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேலத்தாயில்பட்டியில் உள்ள KRTA அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மத்திய அரசு நடத்திய #NMMS தேர்விலும் வெற்றி பெற்று மற்றும் ஊரகத் திறனாய்வு தேர்விலும் வெற்றி பெற்று ஊக்கத் தொகையான ரூ.48,000 பெற்றுள்ளனர் …

அவர்களின் கடின உழைப்புக்கும் அவருடன் இணைந்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்ப க்கும் பெற்றோர் ஆசிரியர்கள் கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் விஜயகுமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கவிதா தனசேகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.


