உசிலம்பட்டியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், பேச்சாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்று பயன்பெறும் வகையில், உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிட வளாகத்தில் உசிலை தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா முனைவர் பார்வதி ராஜேந்திரன் தலையில் நடைபெற்றது. சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளி தாளாளர் வேல்முருகன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் ரங்கநாதன் கலந்து கொண்டார். செக்கானூரனி காவல் உதவி ஆய்வாளர் மதிவாணன், கிரீன் பார்க் பள்ளி தாளாளர் முனைவர் பிச்சை மாயன், நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மதன் குமார், ஆகியோர் கலந்து கொண்டு உசிலை தமிழ் இலக்கிய மன்றத்தின் நோக்கம் செயல்பாடுகள் பற்றி பேசினர் இறைவி சோலார் நிறுவனத்தின் இயக்குநர் பொறியாளர் ரஞ்சித்குமார் தொகுப்புகளை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்ஒளி தமிழரசன் பெருமாள் ஆகியோர் செய்தனர்.