நடிகர் சூர்யா நடித்து ஓடிடியில் வெளியான சூரரை போற்று, முதல் முறையாக மதுரையில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளதுசுதா கொங்காரா இயக்கி நடிகர் சூர்யா தயாரித்து நடித்த சூரரைப்போற்று திரைப்படம் கடந்த 2020 நவம்பர் 12-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில்வெளியானது.கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானாதுஅனைவராலும் படம் பாராட்டப்பட்டஇப்படம் பல்வேறு விருதுகளையும் வென்றதுஆனாலும், இப்படத்தை திரையரங்கத்தில் பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.இந்நிலையில் மதுரை சம்மட்டிபுரத்திலுள்ள பழமையானமிட்லண்ட் சினிமாஸில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
மிட்லண்ட் சினிமாஸில் வெளியாகும் தகவலை சில நாட்களுக்கு முன் அறிந்த சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் ஆன்லைனிலும் நேரிலும் வந்து டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்
வாரம்தோறும் வெள்ளிக்கிழமை புதிய படங்கள் வெளியாவது வழக்கம் தங்களுக்கு பிடித்த கதாநாயகன் படம் வெளியானால் அந்த திரையரங்குகளில் தோரணம், பிரம்மாண்டமான கட்அவுட்கள்வைத்துகொண்டாட்ட
மனநிலையுடன் படங்களை பார்ப்பது மதுரை சினிமா ரசிகர்கள் பழக்கம்அதே போன்று பிப்ரவரி 4 அன்றுமதுரை மிட்லண்ட் சினிமாஸ் வாசலில் சூர்யா ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக குவிந்தார்கள். சூர்யா பேனருக்கு பாலாபிஷேகம் செய்தார்கள்.
படத்தை திரையில் கண்டவுடன் ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பியும், பாடல்களுக்கு எழுந்து நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.இதுகுறித்து திரையரங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது என்னதான் ஓடிடி வழியாக டிவியில் படம் பார்த்தாலும் திரையரங்கில் பார்க்கும் அனுபவமே தனிதான். அதிலும் ரசிகர்களுக்கு தங்கள் ஹீரோவை பெரிய திரையில் பார்க்கும் உற்சாகம் தனியானது. அந்த வகையில் ஓடிடியில் வந்து பலராலும் பார்க்கப்பட்டிருந்தாலும் எங்கள் திரையரங்கில் படம் வெளியாவது தெரிந்து ரசிகர்கள் ஆர்வமுடன் வருகை தந்துள்ளனர். இது மகிழ்ச்சியாக உள்ளது.
திரையரங்கில் படம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இருக்கும் வரை திரையரங்கத் தொழிலுக்கு அழிவில்லை என்றார்.
கொரோனா காரணமாக தியேட்டருக்கு படம் பார்க்க வர தயங்குகின்றனர் என கடந்த இரண்டு வருடங்களாக கூறப்பட்டு வருகின்றன இருந்தபோதிலும் பிரபலமான கதாநாயகன் நடித்த படங்கள் திரையரங்கில் வெளியாகிறபோது இயல்பான கூட்டம் கூடுகிறது அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சூரரைப் போற்று படம் திரையிடப்பட்ட அரங்கில் கூடிய ரசிகர்கள் கூட்டம் என்கிறார் கொம்புவச்ச சிங்கம்டா படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தர் சண்முகம் இந்தப் படம் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம்பெற திரையரங்கில் வெளியாகி இருக்க வேண்டும் என்பதால் படத்தை தியேட்டரில் எந்தவித நிபந்தனையும் இன்றி வெளியிட சூர்யா தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது
ஜோதிகா நடித்தபொன் மகள் வந்தாள் படத்தை ஓடிடியில் திரையிட்டதால் சூர்யா குடும்ப உறுப்பினர்கள் நடித்த படங்களை திரையரங்கில் வெளியிடக் கூடாது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு எடுத்திருந்தது. அதனால் சூரரைப் போற்று படத்தைதியேட்டரில் வெளியிட அப்போது முடியவில்லை மதுரை மிட்லண்ட் சினிமாஸ் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து புதிய படங்களை ஷிப்டிங் முறையில் திரையிட்டு வந்தனர் அதே போன்று சூரரைப்போற்று படத்தை நேரடியாக தயாரிப்பாளர் மூலம் திரையிட ஏற்பாடுகள் நடந்தபோது படத்தை திரையிடக்கூடாது என்று விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டதுடன், எச்சரிக்கையும் விடப்பட்டது அதனை எல்லாம் புறக்கணித்தே சூரரைப் போற்று படத்தை மிட்லண்ஸ் சினிமா நிர்வாகம் திரையிட்டுள்ளது விநியோகஸ்தர்கள் புதிய, பழைய படங்களை அத்திரையரங்கில் திரையிட ஒப்பந்தம் செய்யக்கூடாது என முதல்கட்டமாக விநியோகஸ்தர்கள் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது




- புதிய கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை […]
- முகம் வெள்ளையாக:பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறுபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் […]
- மகிந்த ராஜபக்சேவிடம் 5 மணி நேரம் விசாரணை-கைதாக வாய்ப்பு?இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் ராஜபக்சேவிடம்5 மணி […]
- காலிஃப்ளவர் மசாலா:தேவையானவை :காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது […]
- பெட்ரோல் இல்லை, பணம் இல்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டுவிட்பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி தொடங்கியுள்ளது.இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் […]
- சிந்தனைத் துளிகள்• எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது. • தன் குற்றம் மறப்பதும் பிறர் […]
- பொது அறிவு வினா விடைகள்1.பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?இங்கிலாந்து2.டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?அமெரிக்கா, மலேசியா3.யுவான் […]
- குறள் 214:ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.பொருள் (மு.வ):ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் […]
- இந்திய மக்களைப் பிரிக்கும் வேலையை ஒவைசி செய்கிறார்- பாஜக தலைவர்ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி நாட்டை இந்திய மக்களை பிரித்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். […]
- மனுஷனா இருந்ததுபோதும்… நாயாக மாறிய ஜப்பான் மனிதர்..ஜப்பானில் மனிதனாய் வாழ்வதை வெறுத்த நபர் ஒருவர் ஏகமாக செலவு செய்து நாய் உடை அணிந்து […]
- தமிழ், தெலுங்கில் டப் ஆகும் பிரபல சீரிஸான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்…நெட்பிளிக்ஸின் பிரபல சீரிஸான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தமிழிலும் தெலுங்கிலும் டப் ஆக உள்ளது. இசைஞானி இளையராஜாவின் […]
- இன்று பிரதமர் வருகை -சென்னையில் போக்குவரத்து மாற்றம்பிரதமர்மோடிசென்னை வரவுள்ளதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர […]
- பாஜக நிர்வாகி படுகொலை- 4 ரவுடிகள் கைது!பாஜக நிர்வாகி பாலச்சந்தர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.சென்னை […]
- இனி திருமண சான்றிதழை இணையதளத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்… அரசு அறிவிப்புதமிழகக்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். […]
- முதல் பெண் போர் விமானி அபிலாஷா பாரக் பதவியேற்புஇந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்றார்.மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் […]