சோழவந்தானில் பாசன கால்வாயை தூர்வாராததால் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி. இங்கு.முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் மூன்று போகம் நெல் விளையும் பகுதி. மதுரை மாவட்டத்தின் “தஞ்சை”, உணவு களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. ஆனால் தற்போது பொதுப்பணித்துறை துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பாசன கால்வாய் தூர் வாரப்படாமல் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. சோழவந்தானில் உள்ளவடகரைக் கண்மாயில் இருந்து வைகை ஆறு வரை வரும் 40 அடி கால்வாய் முற்றிலுமாக தூர்ந்து போய் உள்ளதால் அதனை முறையாக தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். இதனால் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பால் பட்டு உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரியல் எஸ்டேட் செய்யும் நபர்கள் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதனை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுத்தி வீட்டடி மனைகளாக மாற்ற கால்வாய்களை மூடும் வேலைகளையும் அரசுக்கு எதிராக செய்து வருகின்றனர்.


இந்த விவசாய கால்வாய்கள் முறையாக தூர்வராத காரணத்தினால் கடந்த பருவமழை காலத்தின் போது சோழவந்தானில் உள்ள ஒன்னாவது வார்டு பகுதியானபேட்டைகிராமம் முழுவதும் நீரில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டது. அப்போது நேரில் பார்வையிட வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் பொதுப்பணித்துறை வருவாய் துறை அதிகாரிகள் விரைவில் கால்வாய் தூர்வாரப்படும் என்ன பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் உறுதி அளித்து விட்டு சென்ற நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது சில தனியார் ரியல் எஸ்டேட் துறையினர் வாய்க்கால் மண்களை அள்ளி தங்களது விவசாய நிலத்தை நிரப்பி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் இதனால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உணவு பஞ்சம் ஏற்படும் சூழல் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் ஆகையால் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக இந்தப் பகுதியில் ஆய்வு செய்து விவசாய நிலங்கள் பாழ்படா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]
- இன்று செவ்வாய் கிரகத்தை முதன் முதலாக சுற்றி வந்த மாரினர்-9 விண்ணில் ஏவப்பட்ட தினம்பூமியை தவிர மற்றொரு கோளைச் சுற்றி வந்த செவ்வாயின் முதலாவது முதல் விண்கலம் மாரினர்-9 விண்ணில் […]
- இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -தமிழ் மகன் உசேன் பேச்சுதமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதிமுக […]
- லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்..,மின்சார வாரியம் எச்சரிக்கை..!மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும் என […]
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]