ஆர்எஸ் எஸ் ஊர்வலத்திற்கு மீண்டும் அனுமதி அளித்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் அக்டோபர் 2ம் தேதி தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ் எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. அதற்கு தமிழக அரசு அனுமதி அளிந்திருந்தது. இந்நிலையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தை காரணம் காட்டி சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்பிருப்பதாக கூறி தமிழக அரசு ஊர்வலத்திற்கு தடைவிதித்தது.இந்நிலையில் அக்.2 பதிலாக நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. அக் 2 பேரணி நடத்த கோர்ட் அனுமதி அளித்திருந்த போதிலும் தமிழக அரசு தடைவிதித்தது. சட்ட ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்தது அரசு. அதனால் அக்.2 பதிலாக நவ.6ம் தேதி பேரணி நடத்தலாம் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மீறினால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.