
உலகின் மிகவும் அமைதியான நாடாக இந்த ஆண்டிலும் ஐஸ்லாந்து தொடர்ந்து 15வது முறையாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, இந்த ஆண்டு ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர், போர்த்துகல், ஸ்லோவேனியா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கனடா, செக் குடியரசு, பின்லாந்து, குரோஷியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு பட்டியலில் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளன.
உலக அளவில் ஐரோப்பா மிகவும் அமைதியான பகுதி என்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
