ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்கும் வகையில், வரும் கோடைகாலத்தில் தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது
சென்னை மற்றும்புறநகர் பகுதிகளைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன் கூறியதாவது: “தள்ளுவண்டிகள் மூலம் ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம், புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம். மக்கள் இருக்கும் இடத்துக்கு நேரடியாகச் சென்று, அவர்கள் விரும்பும்ஆவின் பொருட்களை வழங்க திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக, சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்த 100 புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம். இந்த வாகனம் மூலமாக ஆவின் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய விரும்புவோர் ஆவின் நிர்வாகத்தை அணுகலாம். விற்பனைக்கு எடுக்கும் பொருட்களின் மதிப்பை முன்பணமாக செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்கள் ரூ.10 ஆயிரம் காப்புத் தொகை செலுத்த வேண்டும். மாதம் ரூ.30 ஆயிரத்துக்கு குறையாமல் ஐஸ்கிரீம் எடுத்து,விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்களுக்கு லாபம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வழங்கப்படும். வங்கிக் கணக்கு மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் 2 அரசு அலுவலர்களால் சான்றளிக்கப்பட்ட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஐஸ்கிரீம் விற்பனை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் பகுதிகள் மற்றும் இடங்கள் விண்ணப்பத்தில் முன்னதாகவே குறிப்பிட்டு அளிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]
- ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை […]
- சேலம் அருகே நில அதிர்வு… மக்கள் பதட்டம்சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சத்தத்துடன் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் […]
- மோடி அரசுக்கு எதிராக புதிய பிரச்சாரத்தை தொடங்கி காங்கிரஸ்மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி, வீடு வீடாகச் சென்று கடிதம் அளிக்கும் புதிய பிரச்சாரத்தை […]
- ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி..!மறைந்த திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி […]
- கல்லூரி மாணவ,மாணவிகளுக்காக பேருந்தில் பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர்முகவூர் செட்டியார்பட்டி தளவாய்புரம் போன்ற பகுதிகளை சாரந்த 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சிவகாசி […]
- கன்னியாகுமரியில் பரபரப்பு…. பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்கன்னியாகுமரியில் நடைபெற்ற என்சிசி முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்குவாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொட்டாரம் அரசு […]
- லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்நாகர்கோயிலில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. […]
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்ற க ழக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]
- கருணை கொலை பற்றி பேசும் தலைக்கூத்தல்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் உருவாக்கத்தில் கடந்த 14 வருடங்களாக படங்களை YNOT ஸ்டுடியோஸ் தயாரித்து […]
- இரட்டை இலை சின்னம்: இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் முடிவுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்இரட்டை இலை சின்னத்தை பெற உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 102: கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளிஅஞ்சல் ஓம்பி ஆர் […]
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காகஉழைக்கும் போது மனிதனாகிறான்ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும்போதுஅவன் உண்மையான மனிதனாகிறான். […]